Jump to ratings and reviews
Rate this book

ஜல தீபம் #2

ஜல தீபம் 2 [Jala Deepam]

Rate this book
Historical Based Fiction Written By Sandilyan

340 pages, Paperback

13 people are currently reading
611 people want to read

About the author

Sandilyan

76 books390 followers
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.

சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.

கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.

ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
111 (36%)
4 stars
93 (30%)
3 stars
72 (23%)
2 stars
20 (6%)
1 star
6 (1%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Aargee.
163 reviews1 follower
July 7, 2024
Not as interesting as Part 1, but still very adventurous where Idhaya Chandran meets Catherine & finally tries to reconcile with Manju
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
February 22, 2023
Story evidences and corelating the imagination with historical timeline is genius. But I felt this second part was more of a drag than the actual story plot of this entire part and felt the romance part was too much with elaboration which could have been avoided in simple words.
Profile Image for Bala Senthil.
21 reviews4 followers
July 13, 2016
கதைக்களம் கடலிலும் துறைமுகநகரத்திலும் இருந்ததால் கடல்புறாவை போல கடற்போர், கடற்பயணம்பற்றி இருக்கும் என்று எதிர்பார்த்தேன்...

இதயசந்திரன் உபதளபதியாய் ஒரு போரை வழிநடத்துவதை மட்டுமே ஆசிரியர் இந்த பாகத்தில் குறிப்பிட்டுள்ளார்...
இதயசந்திரனின் காதல் மற்றும் பிரிவு இவ்விரண்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளார்..
ஜலதீபம்- காதல்தீபம்..
Profile Image for Srikanth R.
123 reviews11 followers
August 23, 2012
Slower than last part... Being a historical novel I was expecting lots of action but there wasnt much in this... this part is 75% romance ... But still intriguing enough to keep you on your toes....Hoping the last part finishes with a bang!!!!
Profile Image for Kumaran Vellaisamy.
37 reviews38 followers
January 24, 2015
மஞ்சு, காதரைன் என்ற இரு பெண்களின் அழகில் மயங்கி இதயச்சந்திரன் படும்பாட்டைச் சுற்றியே வரும் கதையில் ஆங்காங்கு சிறிய காணப்படும் சிறு திருப்பங்களால் கதையில் சுவாரஸ்யமும் அதிகப்படுகிறது. காதலுக்கோ காமத்துக்கோ பஞ்சமில்லாத தீபமிது
Profile Image for Saravanan.
356 reviews21 followers
December 5, 2012
இரண்டரை ஆண்டுகளில், சிறந்த கடற்படை மாலுமியான இதயசந்திரனை கனோஜி ஆங்கரே தன் தரைப்படைக்கு உபதளபதியாக நியமிக்கிறார்.
1 review
July 7, 2021
Preface

Prefase to historical novels is a must to understand the historical novel in full sense. You shall include them later.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.